Published : 21 Oct 2019 08:52 AM
Last Updated : 21 Oct 2019 08:52 AM
தூத்துக்குடி
அமைச்சர்களை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தூத்துக்குடியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 16-ம் தேதி சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அமைச்சர்களை அவதூறாக விமர்சித்ததாக, தூத்துக்குடி லூர்தம் மாள்புரம் கலைஞர் நகரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுயம்பு, தூத்துக்குடி தென் பாகம் போலீஸில் புகார் அளித்தார். தமிழக அமைச்சர்களை அவதூறாக விமர்சித்த சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன்பேரில் சீமான் மீது அவதூறாக பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளை வித்தல் 153(ஏ), 505(1)(பி) பிரிவுகளின்கீழ் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT