Published : 21 Oct 2019 08:29 AM
Last Updated : 21 Oct 2019 08:29 AM

சென்னையில் 31 பேருந்து நிலையங்கள், 39 பணிமனைகளில் தூய்மைப் பணி: தனியாரிடம் ஒப்படைப்பு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு

சென்னை

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் முதல்கட்டமாக 31 பேருந்து நிலையங்கள், 39 பணி மனைகளில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகம் சார்பில் 765 வழித் தடங்களில் தினமும் 3,400-க் கும் மேற்பட்ட பேருந்துகள் இயக் கப்படுகின்றன. இவற்றில் தினமும் சுமார் 30 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக் கப்படுகின்றன. ஆனால், பெரும் பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை இல்லை. இதனால் பயணிகள் மழை, வெயில் காலத்தில் கடும் அவதிப்படு கின்றனர்.

தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் முக்கிய பேருந்து நிலையங்களில்கூட குடிநீர், இருக் கைகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லை. குறிப்பாக, பிராட்வே, உயர் நீதிமன்றம், தி.நகர், தாம்பரம் உட்பட பல்வேறு பேருந்து நிலையங் கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேருந்து நிலை யங்களை தூய்மைப்படுத்த வேண் டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 31 பேருந்து நிலையங்கள், 39 பணிமனைகளில் தனியார் ஒப்பந்த தாரர் மூலம் விரைவில் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இது தொடர் பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை பராமரிக்க கடைநிலை ஊழியர்கள் அதிக அளவில் இருப்பார்கள். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக பல ஆண்டுகளாக புதிய ஆட்கள் நிய மனம் செய்யப்படவில்லை. ஒவ் வொரு பணிமனையிலும் 8 கடை நிலை ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 2 ஆக குறைந்துள்ளது.

தி.நகர், கே.கே.நகர், உயர் நீதிமன்றம், வடபழனி, ஐயப்பன் தாங்கல், பெசன்ட் நகர், காந்தி நகர், திருவான்மியூர், ஆதம்பாக் கம் உட்பட 31 பேருந்து நிலையங் களிலும், தாம்பரம், குரோம் பேட்டை உட்பட 39 பணிமனை களிலும் தூய்மை, பராமரிப்புப் பணிகளை தனியார் ஒப்பந்தாரர் மூலம் மேற்கொள்ள உள் ளோம். இதற்கான டெண்டர் வெளி யிட்டுள்ளோம். ஒப்பந்த காலம் ஓராண்டு ஆகும். ஒப்பந்த தொகை ரூ.22 லட்சத்து 60 ஆயிரமாக நிர்ணயித்துள்ளோம். மேற்கண்ட பேருந்து நிலையங்கள், பணி மனைகளில் தூய்மைப் பணிகளை விரைவில் ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x