Published : 19 Oct 2019 10:54 AM
Last Updated : 19 Oct 2019 10:54 AM
திருநெல்வேலி
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக, சிறுமளஞ்சியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
தமிழகத்தில் செயல்படாத ஆட்சி நடைபெறுகிறது. கே.பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பால் விலை, பேருந்து கட்டணம் என அனைத்து பொருட் களின் விலைகளும் கடந்த 8 ஆண்டுகளில் உயர்ந்துவிட்டன.
முதல்வராக இருந்த ஜெய லலிதா எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணையம் 5 முறை சம்மன் அனுப்பியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார் கள் என்றார் அவர். திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT