Published : 15 May 2014 11:02 AM
Last Updated : 15 May 2014 11:02 AM

இளம்வயது திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமண முயற்சியில் இருந்து மீட்கப்பட்டு கல்வி வாய்ப்பு வழங்கப்பட்ட 17 மாணவி கள், பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை ஆட்சியர் தரேஷ் அகமது பாராட்டி, உயர்கல்விக்கான உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

கடந்தாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இளம்வயது திருமண முயற்சியில் இருந்து 92 குழந்தை களை மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள் தலைமை யிலான குழுவினர் மீட்டனர். 13 வயதில் தொடங்கி 17 வயது வரை யிலான இவர்களில் 17 பேர் பிளஸ் 2 மாணவிகள். இந்த 17 பேரும் ஆட்சியர் தரேஷ் அகமது உத்தரவின் பேரில் அந்த மாண விகளுக்கும் அவர்களின் குடும் பத்தினருக்கும் உரிய அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வப்போது மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் கல்வித்துறை சார்பில் அந்த மாணவிகளுக்கான ஆலோச னைகள் மற்றும் உரிய உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இதன் விளைவாக நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், 17 மாணவிகளும் தேர்ச்சி பெற் றனர். இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவிகள் கணிசமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். எசனையைச் சேர்ந்த மாணவி முத்துலட்சுமி 1,010 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இவர்கள் அனைவரையும் ஆட் சியர் தரேஷ் அகமது புதன்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து பாரட்டினர். அவர்களது உயர் கல்வி விருப்பங்களை கேட்டறிந் தார். மாவட்டத்திலுள்ள 2 அரசு கலைக் கல்லூரிகளில் பயில விரும்புவோருக்கு இலவச கல்வியுடன் உரிய உதவிக ளும் செய்யப்படும் என உத்தரவாத மளித்தார். செவிலியர் மற்றும் பொறியியல் படிக்க விரும்பிய மாணவிகளுக்கு கவுன்சிலிங் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டதுடன், அனை வரும் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி ஆட்சி யராக வேண்டும் என்று வாழ்த்தி னார். பின்னர் மாணவிகளின் பெற் றோர்களிடமும் அறிவுறுத்தல் களை வழங்கினார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மாவட் டத்தில் 302 பெண் குழந்தை கள், மீட்கப்பட்டு உரிய வழிகாட்டு தல்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x