Published : 18 Oct 2019 09:46 AM
Last Updated : 18 Oct 2019 09:46 AM

திறன் பல்கலைக்கழகம் தமிழகத்தில் அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல் 

சென்னை

யுனெஸ்கோ, ஒன்றுக்கும் மேற் பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட் டுக்கான தேசிய நிறுவனம், கிறிஸ் டோபல் பிளெண்டன் மிஷன் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி நிலை பற்றிய 2019-ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று ஆய்வறிக்கை நூலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் கல்விக்காக பல மாநிலங் களில் செயல்படுத்தப்படும் திட்டங் கள், மற்ற மாணவர்களோடு மாற்றுத்திறனாளி மாணவர்களை படிக்க வைப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறன் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விழாவில் பங்கேற்றவர்கள் வைத்தனர். இந்தியாவில் தற்போது 6 திறன் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் திறன் பல்கலைக்கழகம் அமைக்க, முதல்வரிடம் கருத்துரு சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x