Published : 18 Oct 2019 09:39 AM
Last Updated : 18 Oct 2019 09:39 AM
சென்னை
அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண் டாடப்பட்டது. இதை முன்னிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கடந்த 1972-ம் ஆண்டு அக்.17-ம் தேதி அதிமுகவைத் தொடங்கினார். 47 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதிமுக தனது 48-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது. இதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தொண்டர்கள் வரவேற்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீ்ர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளரும் முதல்வருமான பழனி சாமி ஆகியோர் அதிமுக அலு வலகத்துக்கு காலை 10 மணிக்கு வந்தனர். இருவரையும், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வர வேற்றனர். இதையடுத்து இருவ ரும், நிர்வாகிகளுடன் இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம் பத்தில், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் தொண்டர் களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்கு நேரியில் இடைத்தேர்தல் நடப்ப தால், இந்த விழாவில் குறைந்த அளவே தொண்டர்கள், நிர்வாகி கள் வந்திருந்தனர். அமைச்சர்களில் டி.ஜெயக்குமார் மட்டுமே வந் திருந்தார்.
நிர்வாகிகள் பங்கேற்பு
மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் இ.மது சூதனன், கொள்கை பரப்புச் செய லாளர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவை துணைத்தலைவர் பொள் ளாச்சி ஜெயராமன், அனைத் துலக எம்ஜிஆர் மன்ற செயலா ளர் தமிழ்மகன் உசேன், செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் 48-ம் ஆண்டு தொடக்க விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT