Published : 18 Oct 2019 09:17 AM
Last Updated : 18 Oct 2019 09:17 AM

இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று தேமுதிக பொரு ளாளர் பிரேமலதா தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பிரேமலதா கூறியதாவது:

இடைத்தேர்தல் நடக்க உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மக்கள் மத்தியில் அதிமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ராஜீவ்காந்தி மரணம் தொடர்பாக சீமான் பேசியுள்ள கருத்தை ஏற்கமுடியாது.

கவுரவ டாக்டர் பட்டம் தற்போது மலிவாக கிடைக்கிறது. இதனால், எல்லோருமே டாக்டர் பட்டம் வாங்குகிறார்கள். சாதாரணமானவர்களே கவுரவ டாக்டர் பட்டம் வாங்கும்போது, முதல்வர் பழனிசாமி ஆற்றி வரும் பணிக்காக அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x