Published : 28 Jul 2015 08:40 AM
Last Updated : 28 Jul 2015 08:40 AM
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரை 98 ஆயிரத்து 321 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நாளுக்கு முந்தைய தினமான நேற்றைய கலந்தாய்வுக்கு 7 ஆயிரத்து 411 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 963 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வுசெய்த 4 ஆயிரத்து 404 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இதுவரையில் மொத்தம் 98 ஆயிரத்து 321 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். பொது கலந்தாய்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT