Published : 16 Oct 2019 12:32 PM
Last Updated : 16 Oct 2019 12:32 PM

காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா பேச்சை நம்புவதற்கில்லை: வைகோ பேட்டி

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வதை நம்புவதற்கு இல்லை என மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (அக்.16) தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காலை 11 மணிக்கு வந்தார். முதலில் அங்குள்ள ஸ்தூபியில் மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, "வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தில் ஆண்டுதோறும் நான் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறேன்.

அமித் ஷாவின் கருத்துகள் அச்சத்தையும் ஆபத்தையும் உண்டாக்கக் கூடிய விதத்தில் உள்ளன. அவர் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று சொல்வதை நம்புவதற்கு இல்லை" என்றார்.

சீமானின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க வைகோ மறுப்பு தெரிவித்துவிட்டார். தமிழகப் பிரச்சினைகளுக்காக இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் என்றார்.

எஸ்.கோமதிவிநாயகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x