இலங்கை குற்றவாளிகள் தப்பிய சம்பவம்: உதவி செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அரசு அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு

இலங்கை குற்றவாளிகள் தப்பிய சம்பவம்: உதவி செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - அரசு அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை

இலங்கை குற்றவாளிகள் தப்பிக்க உதவிய அதிகாரிகள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். இவர்கள் மீது இலங்கையில் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்தனர். இந்தியாவை சேர்ந்தவர்கள்போல் போலியாக ஆதார் அட்டை தயாரித்தனர். இதையடுத்து இருவரையும் கேணிக்கரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் உயர் நீதிமன்றக் கிளை யில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் இருந்தபோதே, ராமநாதபுரம் நீதி மன்ற உத்தரவின் பேரில் இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டனர்.

ஆட்கொணர்வு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் இருவரும் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டதும், தொடர்ந்து அவர்கள் இலங்கைக்கு தப்பிச்சென்றதும் நீதிபதிகளின் கவனத்துக்குத் தெரியவந்தது. இதற்கு நீதிபதி கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆனந்த்வெங்க டேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ராமநாதபுரம் எஸ்பி ஓம் பிரகாஷ் மீனா நேரில் ஆஜரானார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகை யில், இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் கள்ளத் தோணியில் இலங்கை தப்பியுள்ள னர். இதற்கு உதவி செய்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றார்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதி டுகையில், இருவரும் இலங்கை சென்றார்களா என்பது தொடர்பாக இலங்கை அரசிடம் தகவல் கேட்கப் பட்டுள்ளது. இதுவரை தகவல் வரவில்லை என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்படும் துறைரீதியான நட வடிக்கை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும். இந்தியாவில் இருந்து தப்பிய இருவரும் இலங்கை நீதிமன்றத் தில் சரண் அடைந்தார்களா என்பது குறித்து இலங்கை அரசிடம் உறுதி செய்து அத்தகவலை நீதிமன்றத் துக்கு மத்திய அரசு தெரிவிக்க வும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in