Published : 15 Oct 2019 03:25 PM
Last Updated : 15 Oct 2019 03:25 PM
சென்னை
வரும் 18-ம் தேதியிலிருந்து 120 நாட்களுக்கு பெரியாறு அணையைத் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.15) வெளியிட்ட அறிக்கையில், "தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 18.10.2019 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அதேபோன்று, பெரியாறு அணையிலிருந்து 18-ம் கால்வாயின் கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 18.10.2019 முதல் 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கனஅடி வீதம், மொத்தம் 255 மில்லியன் கனஅடி தண்ணீரினை, பாசனத்திற்கு திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், தேனி மாவட்டம், 18-ம் கால்வாயின் கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்," என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT