Published : 15 Oct 2019 10:18 AM
Last Updated : 15 Oct 2019 10:18 AM

கருகிய சம்பா நெற்பயிரை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சும் விவசாயிகள்

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த வெள்ளப்பள்ளத்தில் கடும் வெயிலால் கருகி வரும் சம்பா நெற்பயிரை காப்பாற்ற டிராக்டர் டேங்கரில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் விவசாயி.

நாகப்பட்டினம் 

கருகிய சம்பா நெய்பயிரை காப்பாற்ற விவசாயிகள் டிராக்டரில் தண்ணீர் வாங்கி எடுத்துவந்து பாய்ச்சி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது, தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நெல் சாகுபடி செய்தனர். நெற்பயிரும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில், கடந்த 15 நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால், சம்பா நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. இதனால் நல்ல மகசூல் தரும் என்று நம்பி இருந்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளப்பள் ளத்தில் மழையை நம்பி சம்பா சாகுபடி செய்த விவசாயிகளில் சிலர் தற்போது டிராக்டர் டேங்கரில் லோடு ஒன்றுக்கு ரூ.650 கொடுத்து தண்ணீர் எடுத்து வந்து வயலில் பாய்ச்சி கருகி வரும் சம்பா நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சாகுபடி செலவு அதிகமாகும். மகசூலையும், சாகுபடி செலவையும் கணக்கிட்டால்தான் என்ன மிச்சமாகும் என்பது தெரியவரும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். 15 நாட்களாக கடும் வெயில் அடிப்பதால் சம்பா நெற்பயிர்கள் கருக தொடங்கி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x