Published : 15 Oct 2019 08:20 AM
Last Updated : 15 Oct 2019 08:20 AM

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் 51,208 பேர் டிக்கெட் முன்பதிவு

சென்னை 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் இதுவரை மொத்தம் 51 ஆயிரத்து 208 பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூலாகி உள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன் தலைமையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத் தின் தலைமையக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், அரசு விரை வுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கு.இளங் கோவன், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் கோ.கணேசன் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர்.

ஏற்கெனவே திட்டமிட்டப்படி, கோயம்பேடு, தாம்பரம் சானி டோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்தும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக் கப்பட உள்ளன. வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் மேற்கூறிய இடங்களில் இருந்து 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப் படும். பிற ஊர்களிலிருந்து மேற் கண்ட மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படவுள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் பி.சந்தரமோகன் கூறும்போது, “பயணிகள் டிக் கெட் முன்பதிவு செய்து கொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணைய தளம் (www.tnstc.in) மட்டுமல் லாமல், www.redbus.in. www.busindia.com, www.paytm.com போன்ற இணையதளங்கள் வழி யாகவும் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டர்கள் தொடர்ந்து செயல் பட்டு வருகின்றன. மேலும், பொது மக்களின் வசதிக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூடு தலாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய் வதற்கான வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகை மட்டுமே இப்பேருந்துகளில் பெறப்படுகிறது. தீபாவளியையொட்டி சென்னையி லிருந்து பிற ஊர்களுக்கு 33,870 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 17,338 பயணிகளும் என மொத்தம் 51,208 பேர் டிக்கெட் முன்பதிவு செய் துள்ளனர். இதன்மூலம் ரூ.2.55 கோடி வசூலாகியுள்ளது.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x