Published : 14 Oct 2019 09:11 AM
Last Updated : 14 Oct 2019 09:11 AM

வரைவு பட்டியல் நவ.25-ல் வெளியிடப்படுகிறது: வாக்காளர் சரிபார்ப்பு நவ.18 வரை நீட்டிப்பு- தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

சென்னை

வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் வரும் நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் 25-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

செப்.1-ம் தேதி வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு வாக்கா ளர் பட்டியல் சுருக்கமுறை திருத் தப்பணிகள் திட்டத்தை, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் (voter verification scheme) என மாற்றப்பட்டு, செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டப்படி, செப்.30-ம் தேதிக் குள் வாக்காளர்கள் ‘NVSP’ இணை யதளம்,செல்போன் செயலி, 1950 மற்றும் இ-சேவை மையங்கள் மற்றும் வாக்காளர் உதவி மையங் களில் சென்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பெயர், முகவரி, வயது இவற்றில் திருத்தங்கள் இருந்தால் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தோ, நேரில் வழங்கியோ திருத்தங்கள் மேற்கொள்ளலாம். புகைப்படத்தையும் மாற்றலாம். இவ்வாறு மாற்றி சரியாக உள்ளது என்பதற்கான சான்றிதழையும் பெறலாம்.

ஒரு வேளை, முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள் ளிட்டவை இருந்தால் ‘NVSP’ இணையதளத்தில் உரிய படி வத்தை பூர்த்தி செய்து மாற்றம் செய்யலாம். பெயர் சேர்க்கலாம். இந்த வாக்காளர்கள் தாங்களே விவரங்களை சரிபார்க்கும் திட்டம் கடந்த செப்.1-ம் தேதி தொடங் கப்பட்டு செப்.30-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், 5 சதவீதம் பேரே இத்திட்டத்தின் கீழ் தங்கள் விவரங் களை சரிபார்த்தனர். இதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தமிழகத்தில் பாடகி சித்ரா மூலம் விழிப்புணர்வு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மூலம் விழிப்புணர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும் போதிய விழிப்பு ணர்வு ஏற்படாத நிலையில், செப். 30-ம் தேதியுடன் முடிந்த வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் அக்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால், அக்.15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரி வித்தது. தற்போது, வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்துக்கு அறிவிக் கப்பட்ட காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, ‘‘வாக்காளர் சரி பார்ப்பு திட்டத்துக்கான காலக்கெடு நவ.18-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. மேலும், வரைவு வாக் காளர் பட்டியலை வரும் நவ.25-ம் தேதி வெளியிட வேண்டும் என்றும் அறிவறுத்தியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x