Published : 12 Oct 2019 07:43 PM
Last Updated : 12 Oct 2019 07:43 PM
மாமல்லபுரம், ஐ.ஏ.என்.எஸ்
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடனான முறைசாரா சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக பிரதமர் மோடி தமிழக மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளுக்கு சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், எப்போதும் போலவே, அவர்களது அன்பும் விருந்தோம்பலும் தனித்துவமானது. இந்த செயல்திறன் மிக்க மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கக் கூடியது. மாமல்லபுரத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகான மாமல்லபுரத்த்தில் இந்தியா-சீனா முறைசாரா சந்திப்பின் போது ஆதரவையும் அன்பையும் காட்டிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக-பண்பாட்டு அமைப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சீன அதிபரும் தனது நெகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.
“இந்திய அரசும் தமிழ்நாடு மக்களும் தங்களது உண்மையான வரவேற்பு மூலம் சீன அரசு மற்றும் சீன மக்களிடத்தில் தங்களது நட்பு ரீதியான உணர்வுகளை கொண்டாடுகிறார்கள் என்று நாங்கள் உணர்கிறோம்” என்று சீன அதிபர் முன்னதாகக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT