Last Updated : 12 Oct, 2019 01:41 PM

 

Published : 12 Oct 2019 01:41 PM
Last Updated : 12 Oct 2019 01:41 PM

மத்திய மாநில அரசுகளுக்கு  பாடம் புகட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள்: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேச்சு

திருநெல்வேலி:

மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட காங்கிரஸ் வேட்பாளரை ஆதரியுங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி எம்.பி. சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. கே.டி.சி நகர், சீவலப்பேரி, தோனித்துறை, பாளையம் செட்டிகுளம்,திருமலை கொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது -மத்திய மோடி அரசு சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை எடுத்து மக்களிடத்தில் தருகிறேன் என கூறி மக்களிடம் உள்ள சுருக்கு பையில் உள்ள பணத்தை எடுத்து பெரும் முதலாளிகளிடம் கொடுத்து விட்டார்.

ஒருநாள திடீரென ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மக்களை ஏமாற்றி விட்டார் ,பாஜக ஆட்சியில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன , ஓடும் ரயிலை கூட விட்டு வைக்கவில்லை அதையும் தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது ,அதோடு ரிசர்வ் வங்கி பணத்தையும் எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கை தொடர்கிறது ,நாட்டில் துறைமுகங்கள்,விமான நிலையங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு விற்கப்பட்டு வருகிறது .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டும் மோடி அரசுக்கு பணியவில்லை ஆனால் எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு பணிந்து செயல்பட்டு வருகிறது, இந்த இடைதேர்தலில் அதிமுகவினர் பணம் கொடுப்பார்கள் அந்த பணத்தை வாங்கி கொண்டு கை சின்னத்திற்கு வாக்களியுங்கள், மேலும் மத்திய மாநில அரசுகளை அகற்ற மக்கள் பாடம் புகற்ற வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன்,காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர் மோகன் குமாரமங்கலம் ,முன்னாள் எம்.பி.ராமசுப்பு, காங்கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட தலைவர் கே .சங்கரபாண்டியன் ,கிழக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.எம் சிவகுமார் ,மாவட்ட பொதுச்செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், ராஜ் சரவணன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் , ஒ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் நித்திய பிரியா மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு ,மாவட்ட செயலாளர் கே.எஸ்.மணி , சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முகம்மது அனஸ் ராஜா ,மண்டல தலைவர் ஐயப்பன் உட்பட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x