Published : 12 Oct 2019 09:40 AM
Last Updated : 12 Oct 2019 09:40 AM

அங்கன்வாடி சத்துமாவில் புழு, வண்டு: விருதுநகரில் தாய்மார்கள் அதிர்ச்சி

கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு.

இ.மணிகண்டன்

விருதுநகர்

அங்கன்வாடியில் குழந்தை களுக்கு வழங்கப்படும் இணை உணவான சத்துமாவில் புழு மற்றும் வண்டு இருப்பதைக் கண்டு தாய்மார்களும், கர்ப்பிணிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கும் குழந்தை களுக்கும் ஊட்டச் சத்து குறைபாடு களைப் போக்க தமிழக அரசு சமூக நல மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்கள் மூலம் இணை உணவாக சத்துமாவு வழங்குகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி கள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் 215 டன் சத்துமாவு வழங்கப்படுகிறது.

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டுத் தொழில் கூட்டுறவு சங்கம் லிட். மூலம் இந்த சத்துமாவு தயாரிக்கப் படுகிறது. இதில், கோதுமை மாவு, வெல்லத்தூள், சோயா மாவு, கேழ்வரகு மாவு, தாது உப்பு கள் உள்ளிட்டவை மூலப்பொரு ளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 117 மாவட்டங் களை முன்னேற்றமடையச் செய்ய மத்திய அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரசவத்தில் குழந்தை இறப்பை தடுத்தல், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப் படும் இணை உணவு தரமில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. சத்து மாவு தயாரிக்கப்பட்ட நாளி லிருந்து 4 மாதங்கள் வரை மட்டுமே அவை பயன்படுத்த உகந்தவை. அதனால் ஒவ்வொரு சத்துமாவு பாக்கெட்டிலும் அது தயாரிக்கப்பட்ட மாதம், காலாவதி யாகும் மாதம் குறிப்பிடப்பட் டிருக்கும். கடந்த ஜூலையில் தயாரிக்கப்பட்டு நடப்பு அக்டோபர் வரை பயன்படுத்த உகந்த தாக குறிப்பிடப்பட்டுள்ள சத்துமாவு பாக்கெட்கள் விருதுநகரில் தற்போது வழங்கப்படு கின்றன. இதில் புழு,வண்டு இருப்பதைக் கண்டு கர்ப்பிணி களும், தாய்மார்களும் அதிர்ச்சி யடைந்துள்ளனர். பலர் அங்கன் வாடியில் புழு, வண்டுடன் கொடுக்கப்பட்ட சத்துமாவு பாக் கெட்களை திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை அலுவ லரும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட (பொறுப்பு) அலுவலருமான ராஜம் கூறுகையில், இதுவரை புகார் வரவில்லை. குறைபாடு இருப்பது தெரிந்தால் உடனடியாக குறிப்பிட்ட அங்கன்வாடியில் உள்ள அனைத்து சத்துணவு மாவு களும் ஆய்வு செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு புதிய சத்துமாவு வழங்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x