Published : 12 Oct 2019 07:47 AM
Last Updated : 12 Oct 2019 07:47 AM

‘நாளைய விஞ்ஞானி’ எனும் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா- சென்னையில் நாளை நடைபெறுகிறது

சென்னை

‘நாளைய விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மாண வர்களுக்கான அறிவியல் திருவிழா சென்னை யில் நாளை நடைபெறுகிறது.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக் னாலாஜி (VIT) வழங்கும் ‘நாளைய விஞ்ஞானி’ என்ற மாணவர்களுக்கான அறிவியல் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துகின்றன. இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்கள் கடந்த ஒரு மாத காலத்துக் கும் மேலாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தாங்கள் வாழும் பகுதியில் நிலவும் ஏதேனும் ஒரு பிரச்சினையை அடையாளம் கண்டு, அதற்கான காரணங்களை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து, தீர்வுகளையும் மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். பல்வேறு அறிவியல் வழிமுறைகளைப் பயன்படுத்தி தயாரித்துள்ள அறிவியல் ஆய்வுக் கட்டுரையை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சென்னை மண்டல அறிவியல் திருவிழாவில் சமர்ப்பிக்கின்றனர்.

அப்போது மக்களுக்கு பயன்படும் வகையில் தாங்கள் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுப் பணி குறித்து அறிவியல் அறிஞர்கள் மத்தியில் மாணவர்கள் உரையாற்றுகின்றனர். அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்ளும் இளம் விஞ்ஞானிகளைப் பாராட்டி ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் ஆர்.தனஞ்செயன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

மண்டல அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் குழுக்கள், நவம்பர் மாதம் வேலூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே பதிவு செய்த அனைவரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெகதீஸ்வரன் (9150133336), ‘இந்து தமிழ்’ நாளிதழின் துணை மேலாளர் (விளம்பரம்) சிவக்குமார் (9789056544) ஆகியோரை செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x