Last Updated : 11 Oct, 2019 09:56 AM

 

Published : 11 Oct 2019 09:56 AM
Last Updated : 11 Oct 2019 09:56 AM

இந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

தூத்துக்குடி

இந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று (அக்.11) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், "பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் இவரின் வருகையை வரவேற்று ஏற்கனவே நான் அறிக்கை வெளியிட்டு உள்ளேன்.

இந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என எனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளேன் .

இதன் மூலமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கக் கூடுமா என்பது குறித்தும் ஏற்கெனவே நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளேன்.

ஆகவே அதை பற்றி இப்போது பேசத் தேவையில்லை. நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே மாபெரும் வெற்றி பெறும் " என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x