Published : 08 Oct 2019 10:40 AM
Last Updated : 08 Oct 2019 10:40 AM

பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகை: தமிழிசை பேட்டி

சென்னை

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தம் பணிகள் காரணமாக தெலங்கானாவில் உள்ள தமிழிசை, நேற்று (அக்.7) ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் ஆயுத பூஜை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், பிரதமரின் 'ஃபிட் இந்தியா' திட்டத்தைப் பின்பற்றி ஆளுநர் மாளிகையில் தினசரி பணியாளர்களுடன் யோகா செய்து வருவதாகவும், ஆளுநர் மாளிகையை பிளாஸ்டிக் இல்லா ஆளுநர் மாளிகையாக மாற்றியிருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

"தெலங்கானாவில் நாங்கள் பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகையைப் படைத்திருக்கிறோம். பிரதமரின் 'ஃபிட் இந்தியா' திட்டத்தைப் பின்பற்றி, ஆளுநர் மாளிகையில் தினமும் காலை 5.30 மணிக்கு அங்கே உள்ள நிர்வாகிகள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருடனும் இணைந்து யோகா செய்து வருகிறோம்," என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x