Published : 08 Oct 2019 10:27 AM
Last Updated : 08 Oct 2019 10:27 AM
சென்னை
மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என, பிரதமருக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்துக்கு நேற்று (அக்.7) முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று தமிழிசையைச் சந்தித்து வாழ்த்து கூறினார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தெலங்கானா ஆளுநருக்கு வாழ்த்து கூற வந்ததாகத் தெரிவித்தார்.
மேலும், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என கூறினார்.
மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என பிரதமர் மோடிக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று, ரத்தப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தினார்.
காலம் தாழ்த்தி மருத்துவமனைக்குச் சென்றால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் எனவும், முதல்வர் தெரிவித்தார். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT