Published : 06 Oct 2019 10:57 AM
Last Updated : 06 Oct 2019 10:57 AM

சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்கம்; முழு பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்: மத்திய அமைச்சர் நக்வி பெருமிதம்

சென்னை

சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்கம், இங்குதான் முழுப் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பெருமிதத்தோடு தெரிவித்தார்

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவுக்கு மத்தியஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம், இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமான சூழல் இருப்பதாக உணர்கிறார்களா என்று கேட்டனர்.

அதற்கு அப்பாஸ் நக்வி பதில் அளிக்கையில், " ஒருபோதும் பாதுகாப்பின்மையோடு வாழவில்லை. சிறுபான்மை மக்கள் இந்தியாவில் முழுப் பாதுகாப்போடு வாழ்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு இந்தியா சொர்க்கம். ஆனால் நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு நரகம் போன்றது.

சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு அளித்து இருப்பது உலகிலேயே இந்தியா மட்டும் தான்.

சிறுபான்மை சமூகத்தில் உள்ள பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி வந்தனர். ஆனால், மத்திய அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை மூலம் 70 சதவீதமாக இருந்த இடைநிறுத்தல் கல்வி, தற்போது 40 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

கல்வி அடிப்படையில் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தென் இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் கிளைகளை வட இந்தியாவில் திறக்க முயல வேண்டும் " எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x