Published : 26 Jul 2015 09:57 AM
Last Updated : 26 Jul 2015 09:57 AM
திருமண தடை, காதல் போன்ற பிரச் சினைகளால் விவசாயிகள் தற் கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ள மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்குக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று தெரிவித் திருப்பதாவது:
திருமணம் தடைபடுவது, காதல் பிரச்சினை, ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமங்களில் நிலவும் துயரமான சூழலை மறைக்கும் முயற்சியே இது. விவசாயிகளைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாட்டு மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட்களுக்காவே மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT