Published : 05 Oct 2019 12:31 PM
Last Updated : 05 Oct 2019 12:31 PM

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

சிவகாசி

தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடம் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன்,மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிவகாசியில் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில் கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி 5 நாட்கள் தமிழக அரசு விடுமுறை அளித்து ஆணை யிட்டது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த ஆண்டு தமிழக மக்கள், வணிகர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியூரில் பணியாற்றுவோர் அரசு ஊழியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இம்மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது ‌ மனுவை பெற்ற அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x