Published : 03 Oct 2019 08:46 AM
Last Updated : 03 Oct 2019 08:46 AM

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை

சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.28,848-க்கு விற்பனையானது.

சர்வதேச அளவில் தங்கம் வணிக சந்தையில் நிலையான தன்மை இல்லாததால், திடீரென பெரிய அளவில் உயர்வும் குறை வும் இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது.

இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்தது. இதேபோல், ரூபாய் மதிப்பும் சற்று குறைந்தது. மற்றொருபுறம் முதலீட்டாளர்கள் தங்கத்திலேயே தொடர்ந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது.

சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.28,848-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,606-க்கு விற்கப் பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,556-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்ததால், நகை கடைகளில் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரி கள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள சிறிய நெருக்கடியால், தங்கம் விலை யில் அடிக்கடி மாற்றங்களை காண முடிகிறது. தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 என உயர்ந்ததால், வியாபாரமும் 20 சதவீதம் வரையில் குறைந்து காணப்பட்டது.

இருப்பினும், அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வர உள்ளதால், தங்கத்தின் தேவை அதிகரிக்கும். எனவே, பண்டிகை நெருங்கும் நேரங்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x