Published : 03 Oct 2019 07:54 AM
Last Updated : 03 Oct 2019 07:54 AM

தமிழகத்தில் முதன்முறையாக ரூ.38 கோடியில் பிரம்மாண்டமான மகளிர் விடுதி: வைஃபை, உடற்பயிற்சி கூடங்களுடன் சென்னையில் அமைகிறது

மு.யுவராஜ்

சென்னை

தமிழகத்தில் முதன்முறையாக சென் னையில், ரூ.38 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மகளிர் தங்கும் விடுதியைக் கட்ட சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங் களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் இடவசதி களைச் செய்து தரும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.

பெரம்பூர், வியாசர்பாடி, பள்ளிக் கரணை, சேலையூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிக்கு செல்லும் பெண்களுக்காக 28 அரசு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.

விடுதிகளில் தங்குவதற்கு மாத வாடகையாக சென்னையில் ரூ.300, மாநிலத்தின் பிற இடங்களில் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த விடுதிகளில் சேருவதற்குத் தகுதி யான மாத வருமான உச்ச வரம்பு சென்னைக்கு ரூ.25 ஆயிரம், மாநிலத்தின் பிற இடங்களுக்கு ரூ.15 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கட்டணம் குறைவாக இருந்ததால் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விடுதியில் சேர்ந்தனர். ஆனால், உணவு, இருப்பிடம் உள்ளிட்டவற்றில் போதுமான வசதிகள் இல்லாததால் பெண்களின் வருகை குறைந்தது.

எனவே, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் தனியார் விடுதிகளுக்கு இணையாக தரம் உயர்த்தும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில், 800 படுக்கை வசதியுடன் கூடிய பிரம்மாண்ட மகளிர் விடுதியை சென்னையில் கட்ட சமூகநலத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் 5 ஏக்கர் பரப் பளவுள்ள நிலத்தில் மகளிர் விடுதி அமைக்கப்பட உள்ளது. இதில் நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை, உடற்பயிற்சி கூடம், விருந்து அரங்கு கள், நூலகம், வைஃபை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் பிரம்மாண்டமான மகளிர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. விடுதியில் ஓய்வு அறை, ஒருவர் மற்றும் இருவர் தங்கும் அறை என அறைகள் அமைக்கப்பட உள்ளன.

தனியார் விடுதிகளை மிஞ்சும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும். தனியார் விடுதிகளை விட கட்டண மும் குறைவாக நிர்ணயிக்க திட்டமிட் டுள்ளோம். மகளிர் தங்கும் விடுதி கட்டும் பணி ஒரு சில மாதங்களில் தொடங்கும். தமிழகத்தில் முதன் முறையாக சென்னையில் பிரம்மாண் டமான மகளிர் தங்கும் விடுதி அமைய உள்ளது. இதன் வரவேற்பைப் பொறுத்து பிற மாவட்டங்களிலும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x