Published : 03 Oct 2019 07:46 AM
Last Updated : 03 Oct 2019 07:46 AM

பிரதமர் - சீன அதிபர் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு

மாமல்லபுரம்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் வர உள்ளதால், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் முக்கியமான பேச்சு வார்த்தை நடத்த அக்டோபர் 2-வது வாரத்தில் வருவார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கலைச் சின்னங்களையும் கண்டு ரசிக்க உள்ளனர். இதனால், கோவளம் முதல் கல்பாக்கம் வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் மாமல்லபுரம் நகரில் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தலைமைச் செய லர் மற்றும் டிஜிபி ஆகியோர் அவ்வப்போது நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாமல்லபுரத்துக்கு நேற்று வந்து பார்வையிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட னர்.

அப்போது அர்ஜுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட கலைச் சின்னங்களை பார்வையிட்டு, அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினர். மேலும், நகரில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

முன்னதாக, 'பிளாஸ்டிக் மாசில் லாத தமிழ்நாடு' என்ற தலைப்பில் சிறப்பு முகாம் சுற்றுலாத் துறை அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில், முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி, மேற்கண்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x