Published : 02 Oct 2019 06:03 PM
Last Updated : 02 Oct 2019 06:03 PM

தூத்துக்குடியில் காந்தி 150-வது பிறந்த நாள் விழா கண்காட்சி: அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா கண்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி பிறந்தது முதல் அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கும் படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டார்.

பின்னர் மகாத்மா காந்தி பிறந்த தினம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ''மகாத்மா காந்தி போன்றவர்கள் பிறந்ததால் இந்த நாட்டுக்கே பெருமை. அவரது பெயர் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அகிம்சையால் வெற்றி பெற முடியும் என உணர்த்தியவர் காந்தியடிகள்'' என புகழாரம் சூட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x