Published : 02 Oct 2019 10:03 AM
Last Updated : 02 Oct 2019 10:03 AM
விருதுநகர்
தலைக்கவசம் அணியாத இரு சக்கர வாகன ஓட்டுநர்களை விருது நகருக்குள் செல்ல அனுமதிக் காமல் போலீஸார் திருப்பி அனுப் பினர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனங்களை ஓட்டு பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதை வலியுறுத்தி போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகரில் தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் புல்லலக்கோட்டை சாலை சந்திப்பு, போலீஸ் பாலம், அரசு தலைமை மருத்துவமனை, பி.ஆர்.சி. பாலம், கவுசிகா பாலம், அல்லம்பட்டி முக்கு சாலை, சிவகாசி சாலை ஜங்ஷன், ரயில்வே பீடர் சாலை ஆகிய இடங்களில் நேற்று காலை சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டன.இங்கிருந்த போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸார் தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டுநர்களை மட்டுமே விருதுநகருக்குள் செல்ல வும், விருதுநகரில் இருந்து வெளியே செல்லவும் அனுமதித் தனர். தலைக்கவசம் அணியாமல் ஓட்டுநர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை போலீஸார் எடுத்துக் கூறி அனுமதி மறுத்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோவன், போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் மரியஅருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT