

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் ’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், வாணி கபூர் ஆகியோர் நடித்துள்ள ‘வார் ’திரைப்படம், இரு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெறும் மோதல்களை மையமாக வைத்து ‘வார் ’ திரைப்படம் 172 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படமானது நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் நாளையே வெளியாகவுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில், வார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’ திரைப்படத்தை 2 ஆயிரம் இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.