Published : 01 Oct 2019 04:29 PM
Last Updated : 01 Oct 2019 04:29 PM
ராமேசுவரம்
விசைப் படகுகளுக்கு மானிய விலை டீசல் வழங்க கோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் துறைமுகத்தில் 120-க்கும் மேற்பட்ட படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லும்போது ராட்சத அலை, அதிக நீரோட்டம் இருப்பதால் படகுகள் அடிக்கடி சேதமடைந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தவிர்க்க ஓராண்டுக்கு முன் 10 படகுகள் மட்டும் மரப்படகிலிருந்து மாறி இரும்பில் படகை வடிவமைத்து மீன்பிடித்து வருகின்றனர்.
இரும்புப் படகின் அதிக நீளமாக, கனமாக உள்ளதன் காரணத்தால் இப்படகுகளுக்கு மானிய டீசல் வழங்காமல் மீன்வளத்துறை நிறுத்தியது. தொடர்ந்து கடந்த ஓராண்டாக மானிய டீசல் வழங்கவில்லை.
இந்நிலையில், படகுகளுக்கு வழங்க வேண்டிய மானிய டீசலை விலையை உடனே வழங்கக் கோரி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விசைப்படகுகள் அனைத்தும் பாம்பன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
எஸ். முஹம்மது ராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT