Published : 30 Sep 2019 08:49 AM
Last Updated : 30 Sep 2019 08:49 AM

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அக்.24 முதல் போராட்டம்: மாநிலத் தலைவர் செந்தில் அறிவிப்பு

மதுரை

ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அரசு மருத்துவர் கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்கள் சங்கத் தின் அவசர ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அரசு மருத்துவர்களுக்கு வரை யறைக்குட்பட்ட நேரத்துக்கான பதவி உயர்வை குறுகிய காலத்தில் வழங்க வலியுறுத்தினோம். இது தொடர்பாக பல கட்டப் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வேறு வழியின்றி அக்.,9-ம் தேதி முதல் தர்ணா உள்ளிட்ட போராட்டங்க ளில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம்.

அக். 24 முதல் நோயாளிகளை பாதிக்காத வகையில் அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கத் திட்ட மிட்டுள்ளோம். அக்.30, 31 தேதிக ளில் காலை 7.30 மணி முதல் 48 மணி நேரப் போராட்டத்தில் ஈடுபடு வோம். ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவர்களும் பங் கேற்பர். அவசர சிகிச்சைப் பிரிவு கள் தவிர பிற பிரிவு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நோயாளிகள் பாதிக்காமல் இருக்க, அக்.29-ம் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை கூடுதல் பணி மேற்கொள்வது எனத் திட்ட மிட்டு உள்ளோம். எனவே, எங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புகிறோம். இல்லையெனில் அனைத்துப் போராட்டங்களையும் மேற்கொள் வோம்.

ஏற்கெனவே 8, 15, 17, 20 ஆண்டு களில் பதவி உயர்வு அளிக்கப் படும். ஆனால் 4, 9, 13 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைந்து வழங்கப்படும் என நம்பிக்கை அளித்தாலும் நட வடிக்கை ஏதும் இல்லை. அதனால், போராட்டத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x