Published : 29 Sep 2019 08:19 AM
Last Updated : 29 Sep 2019 08:19 AM
சென்னை
ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னையில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போக்கு வரத்துக் கழக உயர் அதிகாரி கள் கூறும்போது, “ஆயுதபூஜை யொட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு, சிறப்பு பேருந்துகளாக மட்டுமே சுமார் 1000 பேருந்துகளை இயக்கவுள்ளோம். இதேபோல், சென்னையில் இருந்து மட்டுமே 600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். பயணிகளின் வருகையை பொருத்து சென்னையில் இருந்து பூந்தமல்லி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை பிரித்து இயக்கவுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT