Published : 26 Sep 2019 09:09 AM
Last Updated : 26 Sep 2019 09:09 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஸ்டாலின் 10 நாள் பிரச்சாரம்: அக்.3-ம் தேதி பயணத்தை தொடங்குகிறார்

சென்னை

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் அக்.3 முதல் 10 நாட்கள் பிரச்சாரம் செய்ய வுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் அக்.21-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின், அக்.3 முதல் 10 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். விக்கிர வாண்டி தொகுதியில் அக்டோபர் 3, 4, 17, 18, 19 ஆகிய தேதிகளி லும், நாங்குநேரி தொகுதியில் 5, 6, 12, 13, 14 ஆகிய தேதிகளிலும் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், இளை ஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், திருநெல் வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.கே.வி.சிவக்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிடம் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேர்காணல் நடத்தினார்.

காங்கிரஸ் வேட்பாளர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "நாங்குநேரி தொகுதி வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு கட்சி மேலிடத் துக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 27-ம் தேதி (நாளை) காங்கிரஸ் மேலிடம் வேட்பாளரை அறிவிக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x