Published : 26 Sep 2019 08:22 AM
Last Updated : 26 Sep 2019 08:22 AM

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஓரிரு நாட்களில் 450 புதிய பேருந்துகள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார் 

சென்னை

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 450 புதிய பேருந்து கள் இணைக்கப்படவுள்ளன. இந்த புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி ஓரிரு நாளில் தொடங்கி வைக்க வுள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை, விழுப்புரம் உட்பட மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமார் 22,399 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், சுமார் 10 ஆயிரம் பேருந்துகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி இடையே இயக்கப்படுகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,

மேலும் புதியதாக 450 பேருந்து கள் அரசு போக்குவரத்து கழகங் களில் இணைக்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஒராண்டாக அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 450 புதிய பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்த ஓரிரு நாளில் முதல்வர் பழனிசாமி இந்த புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைப்பார். இந்த முறை மாநகர போக்குவரத்து கழகத் துக்கு அதிகபட்சமாக 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் வழங் கப்படவுள்ளன.

இதுதவிர, மற்ற போக்கு வரத்து கழகங்களுக்கும் கணிச மான பேருந்துகள் பிரித்து வழங் கப்படவுள்ளன. மேலும், புதிய வழித்தடங்களில் பேருந்து களின் சேவையைத் தொடங்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x