Published : 25 Sep 2019 08:31 AM
Last Updated : 25 Sep 2019 08:31 AM
சென்னை
காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க, பேரவைத் தலைவர் பி.தனபால், செயலர் சீனிவாசன் ஆகியோர் இன்று உகாண்டா புறப்பட்டுச் செல்கின்ற னர்.
இந்த ஆண்டு, காமன் வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் பங் கேற்கும் காமன்வெல்த் நாடாளு மன்ற 64-வது மாநாடு ஆப் பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார்.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உகாண்டா நாட்டின் தலைநகர் ‘கம்பாலா’ நகரில் 64-வது காமன் வெல்த் நாடாளுமன்ற மாநாடு செப்.25 (இன்று) முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழக கிளையின் பிரதி நிதியாக பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார். சட்டப் பேரவைச் செயலர் கி.சீனிவாசன், மாநாட்டில் நடைபெறும் ‘சோகேட் - சொசைட்டி அட் தி டேபிள்’ கூட்டங்களில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இருவரும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம், தோகா சென்று அங்கிருந்து கம்பாலா நகருக்குச் செல்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அக்.11-ம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT