Published : 25 Sep 2019 08:31 AM
Last Updated : 25 Sep 2019 08:31 AM

பேரவைத் தலைவர் பி.தனபால் இன்று உகாண்டா பயணம்

சென்னை

காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க, பேரவைத் தலைவர் பி.தனபால், செயலர் சீனிவாசன் ஆகியோர் இன்று உகாண்டா புறப்பட்டுச் செல்கின்ற னர்.

இந்த ஆண்டு, காமன் வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் பங் கேற்கும் காமன்வெல்த் நாடாளு மன்ற 64-வது மாநாடு ஆப் பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார்.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உகாண்டா நாட்டின் தலைநகர் ‘கம்பாலா’ நகரில் 64-வது காமன் வெல்த் நாடாளுமன்ற மாநாடு செப்.25 (இன்று) முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழக கிளையின் பிரதி நிதியாக பேரவைத் தலைவர் பி.தனபால் பங்கேற்கிறார். சட்டப் பேரவைச் செயலர் கி.சீனிவாசன், மாநாட்டில் நடைபெறும் ‘சோகேட் - சொசைட்டி அட் தி டேபிள்’ கூட்டங்களில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இருவரும் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம், தோகா சென்று அங்கிருந்து கம்பாலா நகருக்குச் செல்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அக்.11-ம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x