Published : 24 Sep 2019 12:29 PM
Last Updated : 24 Sep 2019 12:29 PM
மதுரை
தமிழக ஒதுக்கீட்டு இடங்களில் பிற மாநிலத்தவர்கள் பங்கேற்றதால் மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்யக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தமிழக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 126 மாணவர்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். பின்னர் இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் சரியாக இருந்தது மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்தில் சீட் பெற்றது போன்ற காரணங்களால் 68 மாணவர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் நீதிபதி எம்.சுந்தர் இன்று (செவ்வாய் கிழமை) அளித்த தீர்ப்பில், "ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வை முழுமையாக ரத்து செய்து புதிதாக கலந்தாய்வு நடத்துவது சாத்தியமானதல்ல. தேவையெனில் அரசு சான்றிதழ்களை சரிபார்த்துக்கொள்ளலாம். அதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT