Published : 23 Sep 2019 08:26 AM
Last Updated : 23 Sep 2019 08:26 AM
ஈரோடு
தமிழகம் முழுவதும் அரசின் அனுமதியோடு கருணாநிதியின் சிலை திறக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கருணாநிதியின் மாணவப் பருவத்தில், அவரைப் பள்ளியில் சேர்க்க நிர்வாகம் மறுத்தபோது, பள்ளியில் சேர்க்காவிட்டால் குளத் தில் குதித்து தற்கொலை செய்வேன் என போராட்டம் நடத்தி பள்ளியில் சேர்ந்தார். கருணாநிதிக்கும், எனது தாயார் தயாளுவுக்கும் திருமணம் நடந்தபோது, கழுத்தில் மண மாலையோடு போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, அதன்பின் னர் தனது திருமணத்தை முடித்துக் கொண்டார். டால்மியாபுரம் பெயர் மாற்ற ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம், மொழிப் போராட்டத்தில் பாளையங் கோட்டை தனிமைச்சிறை, நெருக் கடி நிலையின்போது போராட்டம் என அவரது வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருந்தது.
வாழ்ந்த காலத்தில் மட்டுமல் லாது, அவர் மறைந்தபோதும், மெரினா கடற்கரையில் அண்ணா வுக்கு பக்கத்தில் 6 அடி நிலத்தை கூட போராடித்தான் பெற்றார்.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கும் நீதிமன்றத்துக்கு சென்று போராடி, அதில் வெற்றி பெற்று சிலையை திறந்துள் ளோம். இபோல், தமிழகம் முழு வதும் அரசின் அனுமதியோடு கருணாநிதியின் சிலை திறக் கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT