Published : 02 Jul 2015 05:01 PM
Last Updated : 02 Jul 2015 05:01 PM
மதுரையில் அரசுப் பள்ளி வகுப்பறைகளில் விலையில்லாப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், மாணவிகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப் படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மகபூப் பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தி இந்து ‘உங்கள் குரல்’ பதிவில் கூறியதாவது: மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் படிக்க இடமின்றி மாணவிகளை மரத்தடியில் அமரவைத்து பாடம் நடத்துகின்றனர். விலையில்லாப் பொருட்களை வைக்க வேறு இடம் ஒதுக்கி, மாணவிகளை வகுப்பறையில் அமர வைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: ஒருவாரத்தில் விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விடும் என நினைக்கிறோம். அதன்பின்னர், இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT