Published : 21 Sep 2019 11:37 AM
Last Updated : 21 Sep 2019 11:37 AM

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு செயலி அறிமுகம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 'முத்து மாவட்டம்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

செயலியை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு முத்து மாவட்டம் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

தீபாவளிக்கு முன்பு ஆன்லைன் சினிமா டிக்கெட்..

அவர் மேலும் பேசும்போது, "தீபாவளி பண்டிகைக்கு முன்பு தமிழகத்தில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனையை நடைமுறைப் படுத்த முடியுமா என துறை ரீதியாக பரிசீலித்து வருகிறோம்.

அடுத்த வாரம் திரையரங்கு உரிமையாளர்களை, விநியோகஸ்தர்களை அழைத்து உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது" என்றார்.

ஒப்புக்காக அல்ல..

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தைப் பொறுத்தவரை ஒப்புக்காக ஒரு நபர் ஆணையத்தை நியமிக்கவில்லை. ஒரு நபர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் சமர்ப்பிக்கப்படுகிறதோ அவை அனைத்தையும் அரசு நிச்சயமாக கவனத்தில் கொள்ளும் என அமைச்சர் கூறினார்.

-எஸ்.கோமதிவிநாயகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x