Published : 21 Sep 2019 10:52 AM
Last Updated : 21 Sep 2019 10:52 AM
திருப்பூர்
ஸ்டாலின் முதல்வரானால் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு அருகே காடு வளவு பகுதியில் திமுக இளைஞ ரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று தொடங்கி வைத்து அவர் பேசியாதாவது:
கடந்த 14-ம் தேதி இளைஞரணி அமைப்பாளர் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் முக்கியமானது, இளைஞ ரணி உறுப்பினர் சேர்க்கை. பகு திக்கு குறைந்தது 10 ஆயிரம் பேர் என்ற இலக்கை வைத்து, தமிழகம் முழுவதும் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் உங்கள் எழுச்சியை காணும்போது, உறுப்பினர் சேர்க்கை 30 லட்சத்தையும் தாண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. விரைவில் திமுக ஆட்சி அமையும். மு.க.ஸ்டாலின் முதல்வரானால், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்' என்றார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் ரயில்நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா - பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேலம்பாளையம் பகுதி 4-வது வட்டம் வெங்கமேட்டில், இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT