Published : 21 Sep 2019 10:47 AM
Last Updated : 21 Sep 2019 10:47 AM
தஞ்சாவூர்
திருநங்கைகள் தங்களுக்கு குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் உரிமை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் திருநங்கைகளின் பிரச்சினைகள் தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கருத்தரங்கில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சுதா பேசியது: திருநங்கைகளாக பிறப்பது இயற்கையின் குறைபாடு. மாற்றுத்திறனாளியாக மூளை வளர்ச்சி குன்றி பிறக்கும் குழந்தைகளை புறக்கணிக்காமல் குடும்பத்துடன் அரவணைத்து பாதுகாப்பது போல, இவர்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தனியார், அரசு துறையில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். அவர்களின் தனி திறமைக்கு மதிப்பளித்து வாய்ப்பளிக்க வேண்டும். அரசு 3-வது பாலினமாக இவர்களை அறிவித்து இருந்தாலும், அவர்க ளுக்கு சமூகத்தில் முழுமையான அங்கீகாரம் இல்லை. அவர்களுக் கான சட்டநிலை பொருளாதார நிலை என்ன என்ற தேடல் அனைத்து மக்களிடையே இருக்க வேண்டும்.
திருநங்கைகள் குறித்து சரியான புரிதலோடு, கேலியற்ற அனுசரனை, அன்போடு நடத்து தல், குடும்பத்தினர் இவர்களை புறக்கணிக்காமல் இருத்தலுமே இவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவும் என்பதே நிதர்சனமான உண்மை என்றார்.
கருத்தரங்கில் திருநங்கைகள் ராகினி, சத்யா பேசும்போது, ‘‘திருநங்கைகளின் திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும். குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்கும் உரிமை வேண்டும். தங்கள் பெயரை ஆண் பெயரிலிருந்து பெண் பெயராக மாற்றுவதில் உள்ள சட்ட செயல்முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். தங்கள் தனித்திறமைக்கு வாய்ப்பளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT