Last Updated : 21 Sep, 2019 10:10 AM

 

Published : 21 Sep 2019 10:10 AM
Last Updated : 21 Sep 2019 10:10 AM

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம்

தேனி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார்.

சபரிமலையில் கன்னி மாத (மலையாளம்) பூஜைக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அதிகாலையில் நிர்மாலய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. மாலையில் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். தற்போது மழை குறைவாக இருப்பதால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மாலை அணிந்து, விரதம் இருந்து நேற்று (செப்.20) ஐயப்பன் கோயிலுக்கு வந்திருந்தார்.

ததந்திரி மகேஷ்மோகனரு தீபாராதனை வழிபாடுகள் செய்து பார்த்திபனுக்கு சந்தன பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதரியை சந்தித்து ஆசி பெற்றார்.

இம்மாதத்திற்கான நிறைவுநாள் வழிபாடு இன்று நடைபெறுகிறது. வழக்கமான வழிபாடுகள் முடிந்ததும் இரவு 10 மணிக்கு அய்யப்பனுக்கு விபூதிக்காப்பு செய்யப்படும். பின்பு ஹரிவராசனம் பாடல் ஒலிக்க நடை சாத்தப்படும்.

துலாம் மாதத்திற்கான நடை திறப்பு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x