Published : 21 Sep 2019 08:35 AM
Last Updated : 21 Sep 2019 08:35 AM

முதலீட்டை ஈர்க்கும் வகையில் தொழில் வணிகம், முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழகத்தில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் செயல்பாட்டை முதல் வர் பழனிசாமி தொடங்கி வைத் தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை பன்னாட்டு மையமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ கத்தில் முதலீட்டை ஈர்க்கவும் ‘சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம் பாட்டு அமைப்பு’ உருவாக்கப் படும் என்று கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

இதன்படி, சென்னை கிண்டி, திருவிக தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு கட்டி டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் அலுவலகத்தை முதல் வர் பழனிசாமி திறந்து வைத்து, அந்த அமைப்பின் செயல்பாட் டையும் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்தில் அனுமதி வழங்கவும், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்து வதற்கான ஒருங்கிணைப்பு முகமையாகவும் இந்த அமைப்பு விளங்கும். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள் தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன்மொழிபவர் கள், நிறுவனங்கள் மற்றும் அமைப் புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங் கள் செய்து கொள்ளுதல் ஆகிய வற்றை ஒருங்கிணைக்கும் முகமை யாகவும் இந்த அமைப்பு செயல் படும்.

தமிழக கட்டுமான தொழிலாளர் கள் நலவாரிய நிதியில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.25 ஆயிரம் கட்டு மானத் தொழிலாளர்களுக்கு ரூ.8 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ஒரு பெட்டகத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 177 ஆகும்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பெஞ்சமின், நிலோபர் கபீல், தலைமைச் செயலர் கே.சண்முகம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தொழிலாளர் துறை செயலர் தீரஜ்குமார், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் ராஜேந்திரகுமார், தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x