Published : 21 Sep 2019 08:25 AM
Last Updated : 21 Sep 2019 08:25 AM

எழும்பூர் - தாம்பரம் இடையே பராமரிப்பு பணி; நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து

சென்னை

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செப்.22) காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், இத்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, மதியம் 12.00, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2.00, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, மதியம் 12.00, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, மாலை 3.00, 3.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.00, 11.50, மதியம் 12.30, 1.00, 1.45, 2.15, 2.45, அரக்கோணத்துக்கு மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.40, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதற்கிடையே, பயணிகள் வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை காலை 10.55, 11.30, மதியம் 12.20, 1.00, 1.50 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15, திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 6, தாம்பரம், அரக்கோணத்துக்கு தலா 1 என சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x