Published : 01 Jul 2015 02:27 PM
Last Updated : 01 Jul 2015 02:27 PM

இளவரசன் நினைவு தினம்: தருமபுரியில் 144 தடை உத்தரவு

தருமபுரி இளவரசன் 2-ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 4ம் தேதி வர இருப்பதை ஒட்டி தருமபுரி ஆர்.டி.ஓ எல்லைக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 3 வட்டங்களில் 01.07.2015 முதல் ஒருவாரம் 144 தடையுத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ மேனுவல்ராஜ் அறிவித்துள்ளார்.

தருமபுரியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். காதல் கலப்பு திருமண விவகாரத்துக்குப் பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.

இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாள் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் இன்று (01.07.2015) முதல் ஒருவாரம் வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x