Published : 20 Sep 2019 11:13 AM
Last Updated : 20 Sep 2019 11:13 AM

இந்தி திணிக்கப்பட்டால் திமுக இளைஞர் அணி எதிர்க்கும்: உதயநிதி ஸ்டாலின்

கரூர்

இந்தி திணிக்கப்பட்டால் திமுக இளைஞர் அணி எதிர்த்து போராடும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சிக்குட்பட்ட முத்தக்காபட்டி சொட்டை குளம் தூர் வாரும் பணியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி, கரூர் மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி, தாந்தோணி ஒன்றியச் செயலாளர் எம்.ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட் டத்தால், அமித் ஷா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் போராட்டத்தை ரத்து செய்யவில்லை.

ஒத்திவைத்துள்ள தாகத்தான் அறிவித்துள்ளார். இந்தி திணிக்கப் பட்டால், அதை எதிர்த்து திமுக இளைஞர் அணி போராடும் என்றார்.

தொடர்ந்து, வேலாயுதம் பாளையம் ரவுண்டானாவில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, “பட்டாசு வெடிப்பது பொதுமக்களுக்கும், பறவைகளுக்கும் தொந்தரவாக இருக்கும் என்பதால், இனி வரும் விழாக்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x