Published : 20 Sep 2019 11:05 AM
Last Updated : 20 Sep 2019 11:05 AM

கேரள அரசு வெளியேற்றுவதை தடுக்க சிறுவாணி அணையில் இருந்து 100 எம்.எல்.டி. தண்ணீர் எடுப்பு 

டி.ஜி.ரகுபதி 

கோவை 

கேரள அரசு சிறுவாணி அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதை தடுக்க, தினசரி சராசரியாக 100 மில்லியன் கனஅடி நீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகர் மற்றும் வழியோர கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து எடுக்கப் படும் நீர், வழியோர கிராமங்கள் மற்றும் மாநகருக்கு விநியோகிக் கப்படுகிறது. நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்துதான் அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப் புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 49.50 அடி ஆகும். நேற்று அணையில் 44.28 அடிக்கு நீர் மட்டம் இருந்தது.

நடப்பாண்டு பெய்த மழை அளவை பொறுத்து, சிறுவாணி அணை தொடர்ந்து 6 முறைக்கு மேல் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், ஒருமுறை கூட நிரம்ப வில்லை. கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத் துக்கு பிறகு, அங்குள்ள அனைத்து அணைகளிலும் நீர் தேக்க உயரத்தை பாதுகாப்பு காரணங் களுக்காக 1 மீட்டர் அளவு குறைக்க அந்த மாநில அரசு உத்தரவிட் டுள்ளது.

இதன்காரணமாக, சிறுவாணி அணையில் 49.50 மீட்டர் உயரத்துக்கு நீர் தேக்கப்படாமல், 45 அடி உயரம் வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. சில நாட்கள் இதற்கு குறைவாகவும் நீர் தேக்கப்பட்டது. கடந்த மூன்று வாரத்துக்கு மேலாக இதே நிலை நீடிக்கிறது. இதற்கு மேல் அணை நிரம்பாத வகையில், அணையில் இருந்து அவ்வப்போது வன விலங்குகளுக்கு நீர் திறக்கும் பாதையில் கேரள அதிகாரிகளால் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கடந்த வாரம் கேரள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

வழக்கமாக, அணையில் இருந்து குடிநீருக்காக தினசரி சராசரியாக 35 முதல் 40 எம்.எல்.டி. நீர் எடுக்கப்பட்டுவந்தது. சில நாட்களில் 60 எம்.எல்.டி. வரை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கேரளா தண்ணீர் வெளியேற்றுவதை தவிர்க்கும் வகையில், கடந்த சில நாட்களாக அணையில் இருந்து அனுமதிக்கப்பட்ட முழு அளவான 100 எம்.எல்.டி தண்ணீர் வரை, குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகளால் எடுக்கப் பட்டுவருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும்போது, ‘‘ சிறுவாணி அணையில் இருந்து நேற்று 97 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக 94, 97, 96, 97 என சராசரியாக 100 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு, மாநகராட்சியின் 33 வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. தேவைப்பட்டால், பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டுகளிலும் சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணை குடிநீர் விவகாரம் தொடர்பாக, சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, முதல்வரின் தனிச் செயலாளரி டமும் விளக்கமாக கூறப்பட் டுள்ளது’’ என்றார்.

இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சிறுவாணி அணையில் முழு கொள்ளளவுக்கு நீரை தேக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக மற்றும் கேரள அரசின் உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் இறுதியில் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x