Published : 19 Sep 2019 01:20 PM
Last Updated : 19 Sep 2019 01:20 PM
ராமேசுவரம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (புதன்கிழமை) அதிகாலை 80 விசைப்படகுகளில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் விஜயேந்திரனுக்குச் சொந்தமான விசைப்படகில், ராமு(40), சின்னையன்(40), ஜேசு(49), விஜயேந்திரன் உட்பட ஐந்து மீனவர்கள் சென்றனர். நேற்று மாலை அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை ரோந்து கப்பலிலிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 5 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் படகையும் சிறைப்பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். அதிலிருந்த மீன்களையும் கொண்டு சென்றதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் காங்கேசன் துறைமுகம் அலுவலகத்தில் தங்க வைப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று(வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
-எஸ்.முகமதுராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT