Published : 19 Sep 2019 10:57 AM
Last Updated : 19 Sep 2019 10:57 AM
மதுரை
நாமக்கல் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 14 பேரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இதுவரை 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் மறு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், 18-9-2019 நடைபெற்ற விசாரனையின்போது வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் திருச்சி சிறையிலிருந்தும், மற்ற குற்றவாளிகள் மதுரை சிறையிலிருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து வழக்கின் தொடர் விசாரணை இந்த மாதம் 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
வழக்கு பின்னணி:
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஆனால், வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர் நீதிமன்றம், 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தது. யுவராஜ் உட்பட 14 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். ஜாமீனில் உள்ள செல்வராஜ் ஆஜரானார். சாட்சிகளிடம் மறு விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணையை 27-9-2019க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT